Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி மற்றும் மேல்பள்ளிபட்டு ஆகிய இரு வேறு இடங்களில் வேதாராண்யம் பகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை உடைத்தற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலை உடைத்தவர்களை கைது செய்யகோரியும் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலலால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
செங்கம் தோக்கவாடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50க்கும்
மேற்பட்டோர் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதேபோன்று மேல்பள்ளிபட்டு பகுதியில் நீப்பத்துறை - செங்கம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை மேல்செங்கம் காவல்துறையினர் சமரபேச்சுவார்த்தை நடத்தி கலைக்க சென்றனர். செங்கம் பகுதிகளில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.